பாவேந்தர் பாரதிதாசன் பகுத்தறிவு சிந்தனையாளர் மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர் அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர் சாதி மதப் பிரிவினைகள் சாடியவர் பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர் புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார் பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை கண்டு அன்றே பாடினார் பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும் . அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும் . இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன் . புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில்...