Skip to main content

பாவேந்தர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நாள் என்னாளோ


பாவேந்தர் பாரதிதாசன் 
பகுத்தறிவு சிந்தனையாளர் 
மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர் 
அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர் 
சாதி மதப் பிரிவினைகள் சாடியவர் 
பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர் 
புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார் 
பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை  கண்டு அன்றே பாடினார் 
பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும். இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன்.


புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)


என்று புதிய உலகு படைக்கப் பாடியுள்ளார் பாரதிதாசன்.

புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைப் பாரதிதாசன்,


புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்


என்று பாடியுள்ளார். இப்படிப்பட்ட தன்மை உலகில் மலர வேண்டும். அவ்வாறு மலர்ந்தால் இன்ப உலகமாக இருக்கும் என்றார் .

மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எந்த சூழ்நிலையிலும்
 ஏழை பணக்கார பாகுபாட்டையும் ஆண்டான் அடிமை வேறுபாட்டையும் கடந்து ஒரு பொதுவுடமை சமுதாயம் அமைத்து அதை நாம் உயிர் என எண்ணி காக்க வேண்டும் என்றார் பாரதிதாசன் 
அதேபோல் நாட்டில் சாதி மத பேதம் எல்லாம் ஒரு சிலர் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முறையில் அமைத்துக் கொள்ள மக்களை பிரித்து வைப்பதற்கு செய்த சூழ்ச்சி என்ற உண்மையை முதலில் உரைத்தவர் பாவேந்தர்
அந்த சூழ்ச்சியில் சிக்கி அவதிப்படும் மக்களைப் பார்த்து தீண்டாமை என்ற கொடிய வழக்கம் தமிழகத்தின் முன்னேற்றத்தை வெறும் கனவாக்கிக் கொண்டிருந்தது. சாதி நம் பண்பாட்டுக்கு முரண் என்று கூறிய பாரதிதாசன் சாதி இருக்கின்றது என்று கூறுவோன் இன்னும் உயிர் வாழ்கின்றானே என்று துடிக்கின்றார்.

 'சாதி என்ற சொல்லே தமிழுக்கு உரியதில்லை, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதிப் பிரிவுகள் பழந்தமிழகத்தில் இல்லை.



சாதி மதம் தமிழ் இல்லை - அந்தச்    
சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை.


இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி    
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!


என்று அவர் பாடுகின்றார். சாதிகளை ஒழிப்பதற்குக் கவிஞர் கொடுத்த குரல் தமிழ் நாடெங்கும் பரவியது. அவர் அச்சமின்றிச் சாதிகளைச் சாடினார்; வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புப் போர் நிகழ்த்தினார். சாதி    


இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என்று துடித்தார் .



 இப்படி 40 ஆயிரம் வரிகளால்  தமிழ் பாடல்கள் பாடி தமிழுக்குப் பெருமை சேர்த்த பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்

இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்.சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.



தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் அந்தக் காலத்தில் பட்டிக்காடு என்று சொல்வார்களே அதே மாதிரியான சிறிய கிராமம் கூனிச்சம்பட்டு திருமணமாகாத இளைஞர் பாரதிதாசன் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் அந்த கிராமத்தில் நிலக்கிழார் வீட்டைத் தவிர வேறெங்கும் உணவு கிடைக்காது அந்த ஊரில் ஹோட்டலும் இல்லை பாரதிதாசன் மக்களின் கையை எதிர்பார்த்து இருப்பது அவருக்கு வழக்கமும் இல்லை. ஊரில் உள்ள சிறிய பெட்டிக் கடை ஒன்றில் ஆறு காசு கொடுத்து 15ரொட்டிகளை  வாங்கிக்கொண்டு கோவில் குளத்தில் உள்ள படித்துறையில் துண்டை விரித்து உட்கார்ந்து நாலைந்து சாப்பிடடு  வானத்தைப் பார்த்தவாறு படுத்துவிடுவார் மாலைப் பொழுதில் வீசும் தென்றல் பறவைகளின் ஒலிகள் போன்றவற்றை  கேட்டுவிட்டு மீதியையும்   சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீரை குடித்துவிட்டு  புறப்பட்டு விடுவார் இவ்வாறு எளிமையான ஆசிரியர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த பாவேந்தரை ஆய்வுக்கு வந்த அதிகாரி பாவேந்தர் இடம் சுப்புரத்தினம் இந்த கிராமத்தில் உன்னை பணியாற்ற வைப்பது கஷ்டமாகத்தான் உள்ளது என்று பரிவுடன் கூறிய கல்வி அதிகாரியை பார்த்து இதை விட வசதி குறைவான கிராமம் ஒன்றும் இல்லை எனவே தான் என்னை இந்த கிராமத்தில் பணி அமைத்து விட்டீர்கள் என்றார் இதைக் கேட்ட கல்வி அதிகாரியின் முகம் மாறியது அப்போது அவர்  இந்த பள்ளியில் உன்னை ஆசிரியராக தொடரவைப்பது  நாங்கள் செய்யும் பெரும் தவறு என்று தெரிகிறது எனவே உன்னை புதுச்சேரிக்கு மாற்ற ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டார் சொன்னபடியே அடுத்த சில நாட்களில் மாற்றப்பட்டார்.
கவிஞரின் ஆசிரியப்பணி 38 ஆண்டுகள் அதில் 30 பணி மாற்றங்கள் 1920 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்து வந்த நேரத்தில் பழனி அம்மாள் என்ற பெண்மணியை மணக்கிறார் பாரதிதாசன் அந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மூன்று மகளும் பிறந்தனர் 
பாரதிதாசன் பாடல்களில் காணலாம் தமிழின் அழகை 


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்



எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!


 தமிழுக்காகவே தமிழ் கவிதை பாடிய தமிழ்ப் புலவன் பாரதிதாசன்
தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சி உடையது என்றால் அதற்கு காரணம் சங்ககாலப் புலவர்களில் இன்னும் தொடர்ந்து வாழப் போகின்ற தமிழ் சந்ததியினருக்கு தமிழ் உணர்ச்சியையும் வீரத்தையும் ஊட்டும் தேன் கனி சேர பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன
தமிழ் வரலாற்றில் பாரதிதாசனுக்கு ஒரு நிலையான இடம் உண்டு 
தமிழக்கு பெரும் தொண்டாற்றிய பாவேந்தர் தனது 73 - ம் வயதில்,  21. 04. 1964 ஆண்டு காலமானார்.
தமிழுக்காக வாழ்ந்து மறைந்த தமிழ்ப் புலவரின் பாடல்கள் தமிழ் வரலாற்றில் நிரந்தரமான  வாழ்வுண்டு
விடுதலை இயக்கம் தந்த வெண்ணிலா பாரதி என்றால் 
சீர்திருத்த உலகம் தந்த சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன் 
பாரதிதாசனின்  கனவு நனவாகும் நாள் என்னாளோ 
பாவேந்தரும் பாவேந்தர் பாரதிதாசன் 



Comments

Popular posts from this blog

உலகமே வயதாகிக்கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் இளமையாக இருப்பது எப்படி? 🇮🇳🌏

உலகமே வயதாகிக்கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் இளமையாக இருப்பது எப்படி? 🇮🇳🌏 நண்பர்களே, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கின்றன. இன்று உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பலம் நம்முடைய 'இளமை' தான்! இதோ சில அதிரடி தகவல்கள்: 📊  இந்தியாவின் மக்கள் தொகை: 147 கோடி! ஆமாம், நாம் இப்போது 147 கோடி மக்கள் தொகையைத் தாண்டிவிட்டோம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவின்  சராசரி வயது (Median Age) வெறும் 29.5 தான்!  அதாவது இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களே. 🌍  உலக நாடுகளுடன் ஒரு ஒப்பீடு: 👶  மிகவும் இளமையான நாடுகள்: ஆப்பிரிக்க நாடான  நைஜரில் (Niger)  சராசரி வயது வெறும்  15.3  தான். அங்குள்ள மக்கள் தொகையில் பாதி பேர் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். ஆனால் அவர்களின் மொத்த மக்கள் தொகை வெறும் 2.9 கோடி மட்டுமே. 🏗️  இந்தியாவின் 'பவர்' ( Demographic Dividend ): இந்தியாவில் உழைக்கும் வர்க்கமான 15 முதல் 64 வயதுடையவர்கள் மட...

பங்கு கேட்ட தங்கை... பதில் சொன்ன அண்ணன்

 வேர் அறுந்த உறவு... கை கொடுத்த நட்பு! வருடப்பிறப்பு அதிகாலை. புதிய தொழில் தொடங்குவதற்கான கோப்புகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த குமணனின் முகத்தில் ஒருவிதமான பதற்றம் கலந்த ஆர்வம் குடிகொண்டிருந்தது. "சாரு, எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிருச்சு. ஆனா, கையிருப்பு பத்தாது போல இருக்கு. அப்பா கிட்ட உதவி கேட்கலாம்னு இருக்கேன்," என்றான் மெல்லிய தயக்கத்துடன். சாருலதா அவனை அன்போடு இடைமறித்தாள். "ஏங்க, அப்பா ரிட்டயர்ட் ஆகி அமைதியா இருக்கார். அவர்கிட்ட எதுக்கு இப்போ? என் அண்ணன் பூர்வீகச் சொத்தை விக்கப் போறதா சொன்னார்ல? என் பங்கை நான் கேட்டு வாங்குறேன். அதை வச்சு உங்க பிசினஸை ஆரம்பிங்க," என்றாள் உரிமையோடு. குமணனும் ஒரு நிமிடம் யோசித்து, "சரி, உன் இஷ்டம்," என்றான். இரண்டு மணி நேரம் கழித்து அண்ணனைச் சென்று பார்த்து வீடு திரும்பிய சாருலதாவின் முகம் வாடி இருந்தது. வாசலில் ஸ்கூட்டர் நிற்கும் சத்தம் கேட்டதுமே குமணன் ஓடி வந்தான். உள்ளே வந்தவள் பையைத் தூக்கி எறிந்தாள். "என்னாச்சு சாரு? அண்ணன் என்ன சொன்னார்?" "அவர் அண்ணன் இல்லை, வெறும் பணப் பிசாசு!" என்று வெடித்தா...