Skip to main content

தமிழ் காதம்பரி

தமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர் இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது மகன் இயற்றினார்.
ஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள்.
நூல் செய்த காலம் கி.பி. 1411  திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது.
இவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார்.
பாற்கடல் சென்ற பூசை பாலின்மேல் ஆசை வைத்து
மேற்கொள வரினுப் எல்லா வெள்ளமும் கொள்ள வற்றோ
பாற்கடல் அன்ன காதம் பரிக்கடல் பரப்பில் ஆசை
மேற்கொளும் என்றன் நெஞ்சம் வேண்டுவ கொள்ளும் அன்றே.

Comments

Popular posts from this blog

பாவேந்தர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நாள் என்னாளோ

பாவேந்தர் பாரதிதாசன்   பகுத்தறிவு சிந்தனையாளர்   மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர்   அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர்   சாதி மதப் பிரிவினைகள் சாடியவர்   பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர்   புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார்   பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை    கண்டு அன்றே பாடினார்   பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும் . அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும் . இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன் . புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில்...

உலகமே வயதாகிக்கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் இளமையாக இருப்பது எப்படி? 🇮🇳🌏

உலகமே வயதாகிக்கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் இளமையாக இருப்பது எப்படி? 🇮🇳🌏 நண்பர்களே, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கின்றன. இன்று உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பலம் நம்முடைய 'இளமை' தான்! இதோ சில அதிரடி தகவல்கள்: 📊  இந்தியாவின் மக்கள் தொகை: 147 கோடி! ஆமாம், நாம் இப்போது 147 கோடி மக்கள் தொகையைத் தாண்டிவிட்டோம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவின்  சராசரி வயது (Median Age) வெறும் 29.5 தான்!  அதாவது இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களே. 🌍  உலக நாடுகளுடன் ஒரு ஒப்பீடு: 👶  மிகவும் இளமையான நாடுகள்: ஆப்பிரிக்க நாடான  நைஜரில் (Niger)  சராசரி வயது வெறும்  15.3  தான். அங்குள்ள மக்கள் தொகையில் பாதி பேர் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். ஆனால் அவர்களின் மொத்த மக்கள் தொகை வெறும் 2.9 கோடி மட்டுமே. 🏗️  இந்தியாவின் 'பவர்' ( Demographic Dividend ): இந்தியாவில் உழைக்கும் வர்க்கமான 15 முதல் 64 வயதுடையவர்கள் மட...

பங்கு கேட்ட தங்கை... பதில் சொன்ன அண்ணன்

 வேர் அறுந்த உறவு... கை கொடுத்த நட்பு! வருடப்பிறப்பு அதிகாலை. புதிய தொழில் தொடங்குவதற்கான கோப்புகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த குமணனின் முகத்தில் ஒருவிதமான பதற்றம் கலந்த ஆர்வம் குடிகொண்டிருந்தது. "சாரு, எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிருச்சு. ஆனா, கையிருப்பு பத்தாது போல இருக்கு. அப்பா கிட்ட உதவி கேட்கலாம்னு இருக்கேன்," என்றான் மெல்லிய தயக்கத்துடன். சாருலதா அவனை அன்போடு இடைமறித்தாள். "ஏங்க, அப்பா ரிட்டயர்ட் ஆகி அமைதியா இருக்கார். அவர்கிட்ட எதுக்கு இப்போ? என் அண்ணன் பூர்வீகச் சொத்தை விக்கப் போறதா சொன்னார்ல? என் பங்கை நான் கேட்டு வாங்குறேன். அதை வச்சு உங்க பிசினஸை ஆரம்பிங்க," என்றாள் உரிமையோடு. குமணனும் ஒரு நிமிடம் யோசித்து, "சரி, உன் இஷ்டம்," என்றான். இரண்டு மணி நேரம் கழித்து அண்ணனைச் சென்று பார்த்து வீடு திரும்பிய சாருலதாவின் முகம் வாடி இருந்தது. வாசலில் ஸ்கூட்டர் நிற்கும் சத்தம் கேட்டதுமே குமணன் ஓடி வந்தான். உள்ளே வந்தவள் பையைத் தூக்கி எறிந்தாள். "என்னாச்சு சாரு? அண்ணன் என்ன சொன்னார்?" "அவர் அண்ணன் இல்லை, வெறும் பணப் பிசாசு!" என்று வெடித்தா...